தனித்த பெண்பாதையெங்கும்
தவறியேடும் ஆழங்கள்
கனிந்த மனயிரக்கததில்
காத்திரும் மூகமுடிகள்
இருண்டபொழுதிற்க்குள்
இழுத்தணைக்க பல கரங்கள்
வெளிச்சமிட்டு கறைபூசும்
இரக்கமுள்ள இதயங்கள்
வெறுத்த பொழுதில் வந்து
நடிக்கும் நல்லவர்கள் விலகி நின்று
வண்ணபூசியே மகிழும் அன்பிகியவர்கள்
மரணம் வரை துரத்தியேடும் ரணங்கள்
இருந்தும் கண்கள் இல்லா மனிதர்கள்
எழுதும் போது உச்சம்
தொடும் கற்பனைகள்
எழுதிமுடித்தால் கண்களில்லாஅரக்கர்கள்
இருந்தும் பெண்ணை நேசிக்கும் பாரதிகள்
No comments:
Post a Comment