Sunday 12 May 2019

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

வானத்துமின்மீன்களே
எந்தன் உயிர் உறங்கினால்
எழுந்திட சொல்லுங்களேன்!
கொஞ்சம்!!
ஆயிரம் ஆசைகளோடு காத்திருகின்றேன்
அவளின் முகம் காண  இருந்தும் அவள்
என்னை மறந்திட்டாள் இன்று
அன்னையர் தினமாம்!!


ரோசாவிற்கு முகம்கொடுத்து
 குழந்தையாய் என்கைகளில்  மலர்ந்தவள்
 மலர்கள்போல் உதிர்திட்டாள் என்மடியிலிருந்து

எனக்கு தய்மையை தந்தவள் கொண்டாடிடாது
சென்றுவிட்டாள் என்னை விட்டு
இன்றைய பொழுதில்லாவதுஎன்னை பார்த்திட
வந்திட்டு போக சொல்லுங்களேன்!!

அதிகாலை கனவில் இல்லை அண்ணன்
அவன் மலராகவும் தரவில்லை அதனால்
தேடுகின்றேன் அவளை  இன்றையநாளின்
பரிசுபொருளாய் வந்தாள் அதனால் தானே
என்னை விட்டு தொலைந்திட்டாள்

எல்லாம் தெரிந்தும் தேடுகின்றது இதயம்
இன்னாலில் என்றும் அவளை!!!

No comments: