ஒரு உயிர் அவளை
புரிந்திருந்தால் கூட
அவள் உயிர்
உயிர் வாழத்துடித்திருக்கும் !
ஒரு உணர்வில் அவள்
நேசிக்கப்பட்டிருந்தால் கூட
அவள் புன்னைகளை
மறந்தயிதழைப்போல்
வாடியிருக்க மாட்டாள்!
ஒரு உயிர் அவள்
கொடுமைகளைப்போல்
நடிக்கும் முகங்களிடமிருந்து
காத்திருந்தால் கூட
அவள் சந்தோஷங்களில்
நந்தவனம் பூத்திருக்கும்!!
அவளோடு ஆவலுடன்
அவளைக்கொன்றமரணம்
தீபமற்ற கோவில் இருளின்
மரணத்துளிகளியின் மாலைக்குள்
வண்ணம்வென்ற காகிதப்பூவைப்போல்
யாருக்கும் சுமையின்றி வாழ்கின்றாள் !!!
.jpg)
No comments:
Post a Comment