Saturday, 29 May 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒசையின்றி கனவு 



வாசம் செய்யும்  இரவு! 

தூக்கம் மறந்த நிலவு  

கூட க்கதைகேட்கும்!

வெளியில் தெரியா இருளும் 

உருவம் மறைக்கும்

  திரையாய் மாறும்!

மனதின் வலியே 

நிலவின் கண்ணீராய் மறையும் !

விடியும் பொழுது 

அழுதவிழியே  உறங்க  செல்லும் 

மீண்டும்  கனவு 

தோற்ற வருடங்களைத்தேடும் 

வருடங்கள்  வந்து   

பல மாயக்கண்ணாடியாய்   மறையும் !!

No comments: