Tuesday 6 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அப்பனே நாயகனே 
முப்பொருள் உணர்ந்தவனே 
உன்னையன்றி இவ்வுலகில்
 எவ்வுறவும் எனக்கில்லை இருந்தும்
ஏன்சோதனை செய்கின்றாய்!!
கஸ்ரங்கள் வந்தபோது 
கண்முன்னே மனிதனி்ல்லை
வழியற்றவள் முன் காக்கவழியமைத்து
காத்திடாது நீயே தடுத்தாய்!!
 நம்பியவன் கைவிட நிற்கதியாய்
நான்நிற்க  ஏமாந்தவள் 
கைபிடிக்க  நீயேதான் ஆனாய்!
இருந்தும் ஏன் சோதனைசெய்கின்றாய்!!
 கல்வியை  கற்றிட செல்வத்தை தரவில்லை 
மேன்மையாய் வாழ்ந்திட தகுந்தறிவு பெறவில்லை 
கீழ்மையில் வாழ்ந்தாலும் எவர்
வாழ்வும் அழிக்கவில்லை  இருந்தும்
 ஏன்சோதனை செய்கின்றாய்!!
இருந்தும் இருந்தும் போராடுகின்றேன்
உயிர்வெறுத்து உன்னையே நம்பியே!!
நாளைய விடியல் வேண்டாம் வாழ்வும் வேண்டாம்
நித்திய உறக்கமே எனக்கு எனிபோதும்!!
கடமைகளை முடித்துவிட்டேன் 
காத்த உயிரை சேர்தெடுத்து 
கூட்டிப்போ இறைவா!!

No comments: