Friday, 30 April 2010

கனவிற்குள்.. ஒர் கல்லறை......

உன் இதயவீட்டுக்குள்
விதையாகி....
உன் கண்ணீர்த்துளியால்
அரும்பாகி...
உன் சுவாசக்காற்றால்
உயிராகி....
உன் கனல் ஒளியால்
வளர்ந்து...
உன் வார்தை  கேட்டுப்             
பெரிதாகி....
உன் காதல்மொழியால்
கருவாகி....
உன் மனம் போல்
மொட்டாகி
உன் வர்ணத்தால்
நிறமாகி..
உன்அழகால்    பூவாகி         
உன் மார்வோடு    தலைசாய்த்து
என் விதியோடு கோவப்பட்டு
நொத்து வெறுத்து
உன்னை இழந்து என்னைத் தேடி
உனக்குள் கருகிடும் என்னை
ஏனடா தொலைத்தாய்...................

No comments: