Friday 23 July 2010

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

நினைவுகள் எடுத்து
நியாயம் தேடி
ஆண்டு தோறும்
கண்ணீர் மாலை

கண்கள தொலைத்து
காவியம் தேடும்
கல்லறை மாலை


அன்பைத் தொலைத்த
மறத்தமிழன் தேடிடும்
காணமல் தொலைந்த ஒற்றுமைமாலை


வந்து வந்து போகும்
நாட்களின் கொடுமையை
கிழித்தெறித்து வாழ்வைத்தேடும்
புதிய சிந்தனையின் கண்ணீர் மாலை


தொலைந்த தமிழனுக்காய்
தொலையும் தமிழன்
ஆண்டுக்கு ஆண்டுக்கு
தேடிடும் கண்ணீர் மாலை


விடுதலைத்தீயில் விடுதலைதேடும்
உண்மை தமிழனின்
உண்மைக் கண்ணீர் மாலை


தொட்டெடுத்து கட்டிய உயிர்களின்
வெற்றி மாலையின் கண்ணீர் பூவிற்குள்!
இன்று கண்ணீர் மாலையாகின்றது
நாளைய உதயம்..............

No comments: