Monday 26 July 2010

ஞாபக அலைகள்


என்னிடத்தில் வந்து போகும் 
என் நினைவுகள்
என்னைத் தொலைத்து
என்னைத் தேடி உன்னிடத்தில்
வந்து மோதி நிற்பது   உண்மையடா

என்னை மீட்கா என் நினைவுகள்
உன்னிடத்தில் என்னைச்  சிறையிட்டு 
மீண்டும் மீண்டும் என்னைத் தேடுவது
 ஏனடா?

உன்னோடு நான் தொலைத்த
அந்த இருள்குடித்த நாட்களை    
என் கரம் பிடித்து
கதைபேசி என்னை மீட்டு 
உன்னிடத்தில் என்னை ச் சேர்க்கஒரு தரம்
எனக்காய்   வாயேன்டா?
உன்னோடு நானும்என்னோடு நீயும் வாழ…..

No comments: