Wednesday 4 August 2010

ராதையின் விழி பேசும் சாரல்...............

அழகுத் தமிழ் சொல்லெடுத்து
மழைத்துளி நீரெடுத்து
நட்சத்திர ஒளியொடுத்து
ரோஜேப்பூ இதழெடுத்து
வாணவிலின் வர்ணம் தொட்டு
ராதையவள் வரைந்த கண்ணன் !!

மாயவுலகிற்குள் மாயமாய்
நின்று கேள்வியாய் அவளை
வைத்து வேடிக்கையாய்
மனதை வைத்து
கேலி பேசி கேலி பேசி
விளையாட்டாய் அம்பு விட்டு
அம்பு விட்டு வந்தவன்!!
இயப்பூவின் காதலால்
புல்லாங்குழல் இசையில்
புதுராகம் மீண்டுகின்றான்
ராதைக்காய்


************************************

ராதையின் கள்ளக்கண்ணன்
தன் புல்லாங்குழல் இசையால்
அவளை அழைத்து மாயங்கள்
பல செய்து காதல் மொழி
உரைக்க!
கருப்பிற்குள்அழகனாய்
வாழ்வின் துணைவனாய்
தன் அருகேஅவனிருந்து
ரசிப்பது புரிந்த ராதை
பெண்மையின் நாணத்தால்
தன் முகம் சிவக்க
விழியிரண்டும் கெஞ்ச
மொழியிருந்தும் மெளனமானாள்
அவன் சுவாசத் தீண்டல் பட்டு......
****************************************
அவளுக்குள் இருந்து
அவளோடு இணைந்து
போகும் திசையெங்கும்
வந்த கண்ணன் தன்
புழ்லாங் குழல் காற்றாய்
அவள் சுவாசம் எடுத்து இசையாய்
இசைத்து இசைத்து
தன் வசம் கொண்ட பின்பும்..
அவளை தவிக்க விட்டு தவிக்கவிட்டு

அவளோடு இருந்து கொண்டே
மௌனமாய் சிரிக்க..

கெஞ்சியவள் கண்களில்
வந்த கோவம்ஆண் மீதே தோன்ற
தன்னை சோதித்தவன்
கண்களை விட்டு மறைந்தாள்
கோவத்தில் ...

*****************************************
உனக்காய்  என்னை வைத்து
என் உயிரின் உணர்வாய் நீ
இருந்து
என்னை அறிந்து என் நிழலாய்
 என் பின்னோதொடரும் கண்ணா 

உனக்குமாடா
என் மனசு விளையாட்டுத் திடல்!!
கேட்காது தந்திடும்  மனசை
அறிந்தும் அறியாதவன் போல்
என்னிடமே திருட்டுத் தனமேனடா
 எனக்கேதெரியாமல் நீ உடைப்பது

 பால் குடம் மட்டுமில்லை        
என் மனசும் தானடா!!!
மீண்டும் மீண்டும்
உடைக்காதே என்னை!!
வதை பட்ட என் மனசு
தாங்காது துடிக்கின்றது உன்னால்.......................

No comments: