Saturday 10 April 2010

பிறை நிலா


தேய்ந்தாலும் மறைந்தாலும்
விட்டு விட்டு வளர்ந்தாலும்
வளராது இருளோடு பூத்தாலும் ! 
ஒளியிழந்து தவிந்தாலும்! 
என் காலம் இனிமை 
தராது போனாலும்!
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாத்தாலும்!
தொலைதூரத்து தென்றலாய்
என்னை நீ வதைத்தாலும்!

கண்ணீரை மட்டும்
கண்கள் வரைந்தாலும்
முழுமையின்றி அழிந்தாலும்
திசைகளின்றி போனாலும்
மாறாது விடிந்திடும்
பொழுதுக்குள் உனக்குள்
வாழ்ந்திடும் நிமிடங்கள்
என்னோடு வாழ்ந்திடும்
காலம் வரை என்
இதழ்பூக்கள் என்றும்
உனக்காவே பூக்கும்........
என்றாலும் புரிந்திடு கல்லறை
சாட்சியாகும் வரை தான்........

No comments: