செறிந்த பார்வைக் கண்மணிக்கு
உடைந்த மனசு உள்ளுக்குள்
ஆனால்
சிரிக்கும் உதடு அவனுக்காய்!!
விடிந்தும் விடியா இரவு
விழுந்தெழுந்த கனத்த
இதயனக் கண்மணிக்கு
இருண்ட வாழ்வு உள்ளுக்குள்
ஆனால்
அமவாசைக்காலத்தில் உதிக்கும்
நிலாமுகம் அவனுக்காய்!!
கொண்ட வாழ்வில் கொள்ளும்
வேதனைக் கண்மணிக்கு
விழிகளுக்குள் தேங்கும் கண்ணீர்
உள்ளுக்குள் ஆனால்
இட்ட பெட்டும் கட்டும் பட்டும்
அவனுக்காய்!
No comments:
Post a Comment