Monday 5 July 2010

கனவில் பிடித்த கைகள்....

ஏந்தியவன் எதுகை மோனைக்காய் 
ஏந்தியவளைக் கவிபாட 
இல்லா உலகத்தின் 
இல்லாப் பொய்யாய்
கற்பனையில் தோற்க்காப் பெண் 
கொண்டவன் கரங்களில் 
கவியானாள்!


காதலின் உயிர்த்துடிப்பால்
காலமெல்லாம் காதலாய்
வாழக் கை கோர்த்தவள்
காதலின் ஏதுகை மோனை போல்
உண்மை வாழ்வின்
கற்பனையில் தோற்றாள் 
காதல் பெண்!

சொன்னவன் வார்த்தைகள் 
அத்தனையும் நட்சத்திரமாய் மின்ன 
சுகமிழந்த வாழ்வு 
சுமையோடு கசக்க 
பொறுமையின் சகிப்பு 
பெண்மை என்று மாற 
நிலையான கனவில் 
நிலையற்ற ஆசைகள் 
வந்து வந்து போக 
பிள்ளையோடு கணவன்
புகழ் மாலை சூட 
இருபதும் அறுபதும் 
இல்லாது தொலைய 
இருந்தும் வாழும் கனவைக் 
கண்ணீரில் கரைத்து 
மறு ஜென்மத்துப் பாட்டியாய் 
வாழ்கிறாள் கற்பனைப் பெண்!

No comments: