Wednesday 19 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பட்டுடன்  கைவளையல் 

அழகு சேர்க்க  கார்கூந்தல் 

தன்னை மறைத்து 

மல்லிகை புன்னகைக்க  

பாவையவள் கோயில் 

சென்றாள்! கால் நனைத்த 

நீர்த்துளி  தரையில் சிந்த 

கோபுரங்கள் தலைவணங்கி  

முதல் படியில் கால்வைக்க 

கண்ட  கனவிற்க்குள் 

கனவாய் போன உருவம் 

கண்ணெதிரே தோன்றக்கண்டாள்  

பார்ததும்   தடுமாறியே 

எடுத்தபாதம் தரை தொடாமல் 

ஒருநிமிடம்  தனை மறக்க 

நிழலாய்   போன  நியம் 

எதிரே திரும்பி பாராமல் நிற்க

ஒற்றை சொல்  உயிர்  துறக்க 

எடுத்த பாதம் நடைபயில 

கிட்ட  சென்றவள் பார்த்த முகம்

 ஒற்றை நிமிடக்கற்சிலையாக்க 

சடடென விழித்தவள் விழிகளில் 

கனவின் இருள் நீரை துடைத்தது !!!




No comments: