Wednesday 13 September 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 நம் கனவுகள் ஆசைகள்

ஓரு கற்பனை உலகத்தேட

நிழலாய் மறைந்தே 

வாழும் போதுதான்

நியவாழ்க்கை  

வெறுபில் விழுகின்றது

நம் நம்பிக்கை 

ஓருவர் தூக்கியுடைத்த

பொம்மைபோல்  

சிதறிவிழுந்திடும் போதே 

நம் மனசு உறைந்து விடுகின்றது

விழிகள் அசைகையில்

 விம்பங்கள் தோன்றினாலும் 

உயிரற்ற விம்பமே வந்து

மறைகின்றது

தோற்றதைவிட வலி 

 தோற்கடித்தவர் தந்த

ஏமாற்றதின் வலியே 

பெரிய பறையின் சுமையாகின்றது!!!


No comments: