Friday 15 September 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இசையின் கரங்களை பற்றியே

காதல் செய்தவள்

 மழையின் துறல் 

பட்டுக்கவிதையானவள்

வெண்ணிலாவின் வளர்பிறைக்குள்

பூவாய்   மலர்ந்தவள்

ஓவ்வொரு விடியலிலும் 

ஆதவன்  ஒளியின்  கரங்களின்

உளியாய் எழுபவள்

வானவில்  வளைந்தால் மட்டுமே

துள்ளி விளையாடுவாள் 

சிறுமியைப்போல்!!

இந்த பூவிற்க்கு  எந்த பூவும் 

தலைசாய்க்கும் 

தன்னைபோன்ற தனிமையானவள்

என்று !!!

இந்த பூவின் மரணக்குடைக்குள்

ஓரு ஆசை கைபிடிக்கின்றது

தானாய்!!!



No comments: