இசையின் கரங்களை பற்றியே
காதல் செய்தவள்
மழையின் துறல்
பட்டுக்கவிதையானவள்
வெண்ணிலாவின் வளர்பிறைக்குள்
பூவாய் மலர்ந்தவள்
ஓவ்வொரு விடியலிலும்
ஆதவன் ஒளியின் கரங்களின்
உளியாய் எழுபவள்
வானவில் வளைந்தால் மட்டுமே
துள்ளி விளையாடுவாள்
சிறுமியைப்போல்!!
இந்த பூவிற்க்கு எந்த பூவும்
தலைசாய்க்கும்
தன்னைபோன்ற தனிமையானவள்
என்று !!!
இந்த பூவின் மரணக்குடைக்குள்
ஓரு ஆசை கைபிடிக்கின்றது
தானாய்!!!
No comments:
Post a Comment