Saturday 13 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

எட்டெடுத்து வைப்பதற்குள்
எழாதே தடுக்கும்  கை
தத்திதத்தி நடக்கையில்
சொல்லாலே தடுக்கும் கை
தனாக நடக்கையில்
சதியாலே தடுக்கும் கை
தலைநிமிர்ந்து நடக்கையில்
தலைமறைவாய் தடுக்கும்  கை
எதிர்த்து நடக்கையில்
மானமாய் தடுக்கும்  கை
வீரமாய்  எழுகையில்
நம்பிகையால் தடுக்கும்  கை
எதிரியாய் எழுகையில்
பெண்மையாலே தடுக்கும்  கை
என்று புரியாதே வலையாகுது
புதிராய்  கைகள்!!!

No comments: