தம் துயர்களைந்து தமிழ்துயரழிக்க
தரணியில் பெருமைகொள் பாதை வழியாகி
செங்கடல் மண்ணின் விதையான
செந்தமிழ் வீரர்களே!!முதல் வணக்கம்!
உள் உணர்வினை விடுதலையாக்கி
உள்மூச்சின் உயிரதனை எரிகதிராக்கி
செங்கதிர் ஒளியாய் தமிழ்தேசம் வீசிய
செந்தணல்வீர்களே!!தமிழ்வணக்கம்!
ஈழத்தைக் கனவாக்கி இரவை விடியலாக்கி
ஈகையாய் உயிர்கொடுத்து உடல்வென்று
செங்குருதி குளியலில் மலராகி
சென்நிற பூவாய் பூத்தவர்களே!மலர் வணக்கம்!
உறவுகளின் உணர்வுகளை எரிமலையாக்கி
உறக்கமின்றி உறங்கும் எரி தணலாய்
செம்மண்ணிண் கல்லறை காவியமான
செந்தணல்களே உங்களுக்கு!! சுடர்வணக்கம்!!!
No comments:
Post a Comment