Tuesday, 31 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மனிதா  உன்னை 

நீயும்  சிந்திக்கும்  காலம் 

எக்காலம்!!!  

பெண்ணாய்  ஆணாய் 

ஏன்  பிறந்தாய்   ஒன்றுக்கு 

ஒன்று  வாழ்வைகெடுத்து 

இல்லாமல்  போகும்  

நிமிடத்தில்  நின்று  

எச்சம்  விழும் எச்சிலால் 

முகம்  கழுவி யாருக்கு 

யார் சிறந்த பிறப்பென 

அம்பினை கையை விட்டு  

விழுந்த  கிளியினை  

வைத்து புத்தனாய் 

வேடம்  போட்டு  நடிப்பதால் 

எந்த போதிமரத்திற்கும் 

பயனில்லை !!பயனற்ற 

பயணங்களால்  எழும் 

கேள்விக்கு   நாளைய 

பரம்பரைக்கே  விடையில்லா 

தோல்வியே  வரலாறாய்  மாறும் !

 


No comments: