Sunday 30 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓற்றை வீணைக்குள் விழுந்த

உயிர்த்துளி  ஊமையாக்கியது

இசையை 

பெற்ற வலிக்குள் விழுந்த 

கண்ணீர்த்துளி  குருடாக்கியது

கண்னை

இற்றைவரை புரியாமலே

ஊணமாக்கியது காதல்

கற்றவரை துணையாய் வருகின்றது

கவிதை

இக்கதியில்  கூட நடக்குது

கற்பனை 

எக்கதியிலும் என்னை  தாங்குது

தனிமை

அக்கம் பக்கம்  

யாருமில்லாப்பொழுது

உறக்க சொல்லு உறக்கம்

இப்பொழும்  சொல்லாமல்  துடிக்கு 

உயிர் 

எப்பொழு  சொல்லும் என

தெரியாமலே தயங்கியே கிடக்கு மனசு!!!







No comments: