Wednesday 12 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

வாழ்க்கையே   இல்லையென

இறைவன் சொன்ன 

விதி

இருந்த தைரியம் தொலைத்தே 

என்னை கோழையாக்கிய

விதி

போதுமென துன்பம்  கொடுத்தே

இன்பதை அதிஸ்ரமாய் தொலைத்த

விதி

 சொற்கள் குத்தியே இதயம்

பட்டு காயம் கண்ட

விதி

மரணத்தை தந்து மனதை

வென்றிட  இறைவன் எழுதிய

வீதி

இறந்த காலத்தின் ஆசையை

நான் இறந்தகாலத்தில் தேடிடும்

விதி

நிகழ்காலமாய் தூரத்தியே வருகின்றது

என் இருண்ட முகம் பார்த்தே

விதி!!



No comments: