ஏனோ சிலநேரம்
சிலநொடி
நீயே எல்லாமாய் உணரவைக்கிறாய்
என் கைபிடித்து
குழந்தையைப்போல்
கூட்டியும் செல்கிறாய்
அடுத்த நொடியே
என் உணர்வை பொய்யேயென
நினைக்கவைத்தே
தனிமையைக்கு துணையாக்கி
என் உணர்வை
பொய்யாக்கி விடுகின்றாய்!!!
வெளிவரமுடிய உன் உணர்வும்
வெளியேவரமுடிய என் மரணமும்
தோற்றே விழுகின்றது மரணக்குழிக்குள்
இருந்தும் இல்லா உன்னைப்போலே।
No comments:
Post a Comment