"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
குட்டி குட்டி ஆசைகளையே
கொண்டாட முடியா இவள்
எப்படி தோற்ற ஆசைகளை
கொண்டாட ஆசைப்படுவாள்
இவள் தனிமையை
உடைக்கும் காலமே இவளை
தனியாகவே விட்டுவிடேன்
எப்பவும்
இவள் நினைப்பதும்
நடப்பது வேறு வேறேகவே
முடிகின்றதால் எப்பவும்
இவளுக்கு பொருந்துவது
தனிமையாகட்டும்
Post a Comment
No comments:
Post a Comment