Tuesday 31 December 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யாரோ ஒருவர் கற்பனையே
என்னை தீர்மாணிக்கும்
என்றால் நியங்கள் என்றும்
நிழலே!!வலிகளை மறந்திடவே
இதயங்கள் வழிகளைதேடும்
நியங்களை யாரோ ஒருவரின்
அறிவு திருடுமெனில்  இதயங்களின்
வலிகள் நிழலே!!


மனங்களின் காயங்களை  காணா
உடல்களை தேடுவது நியாயமெனில்
Bildergebnis für தனிமையாரோ ஒருவரின் சிந்தனையில்
மனதின் காயங்கள் நிழலே!!
அழுக்களை அறிவு அடைத்து காப்பது
நியமெனில் யாரோ ஒருவரின் காமதின்
கற்பனைக்கு பெண்மையின்
 ஆடைகள் நிழலே!!
பேசியவர்த்தைகளின்  அர்த்தங்களை
கேட்பவர் அறிவுக்கு பொருளானால்
 தவறுகள் வார்த்தையின்
 பொருளுக்கு நிழலே!!
புரியா இதயத்தின் அருகே  கோடிகளின்
நடுவேயாரோ ஒருவராய்  உறங்கிய நிழலாய்
வாழ்வை தொலைப்பதைவிட
முற்களின் நடுவே பாதங்களின் காயத்தோடு
நடப்பதே  இனிமை!!!

No comments: