Tuesday 24 December 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிரையழித்து உறவை
இழந்து கண்கள் சிந்த
இதழ் புன்னகை வந்தது
தனிமை!!
நேசத்தை இழந்து மரணதை
கொடுத்து  துயரதை சொந்தமாக்கி
புரியா இதயங்களை அக்கம்  பக்கம்
வைத்து  வலிகள் தந்தது
 தனிமை!!
உதவிக்காய் என்னைத்தேடி
தேவைமுடிந்ததும்  வெறுத்து
பின்னால் பேசிய நல் வாயால் வந்தது
தனிமை!!
Bildergebnis für தனிமை
நம்பிக்கைகொண்டதால்  ஏமாந்து
நம்பிக்கையே துரோகமாகி
கண்ணீருக்கே கண்ணீர்
பரிசானதால்  வந்தது
தனிமை!!!
இனியும் வாழ இனியவாழ்கை
இல்லையென்ற விதியால் அவர் சொன்னதெல்லாம்
உண்மையென நம்பிய பொய்யால்
சேர்ந்தது  தனிமை!!


No comments: