Tuesday 8 July 2014

காத்திருக்கின்றேன்.. உனக்காய்.

என் விழிகளுக்கு
 புரியவில்லை நீ
 எனக்கு சொந்தமின்றி  போனது!!

என் இதயதிற்கு
புரியவில்லை நீ
நிழலாய் மாறியது

என் உணர்விற்கு
புரியவில்லை நீ
இணைய முடியா காதலென்று

என் இசைக்கு
 புரியவில்லை நீ
ஊமையான ராகமென்று

என் கனவிற்கு
புரியவில்லை நீ
வெறும் கானல்நீரென்று

என் உயிருக்கு
புரியவில்லை நீ
உயிரற்ற ஓவியமென்று

என் கற்பனைக்கு
புரியவில்லை நீ
கவிதையாய் கரைவது

எனக்குப்புரியவில்லை
உன்னை மறந்து வாழ்ந்திட
முடியாதிருப்பது ஏனென்று!

 காதலுக்கு புரியவில்லை
காதல்தான் யாதென்று!!


No comments: