Friday, 22 May 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

அத்திப்பூ சிகப்பழகில் 

ஆதவன்  முகில்குளிக்க 

பவளமல்லி வாசத்தில் 

மாமன் தோப்புக்குள் என் 

மனசு  தான்  குளிக்க 

வெட்டிக்கொண்டு ஓடுது 

ஆத்துநீருக்குள்  கயல்விழி 

கட்டிப்போட முடியாமல்  !!

எட்டுத்தொட்டு  எடுத்து 

பதுங்கி நிக்கின்றது கால்கள் 

மாமன்  அழகில் !

கொட்டி கிடக்கின்றது வேர்வை 

எடுத்து விதைக்கும்  விதைநெல் போல் !!


 

No comments: