Monday, 28 April 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............

 இதுவரை  இவளுக்கு!  

கேட்டதுக்கும்மில்லை 

கிடைத்ததுவுமில்லை 

வெள்ளைக்காகிதத்தில் 

வண்ணமில்ல சொற்களோடு 

விளையாடி  இத்தனை 

காலமா!  வியக்கின்றாள் 

தனிமை  தவத்தை  எண்ணி!

இருந்தும் !  தொலைத்ததை 

தேடும் குழந்தை  போல் 

விழுந்து  எழுந்து   நடக்கின்றாள் 

தனியாய் ! கண்கள்  அடிக்கடி 

குளமாகும்   

பூக்கள்  பூக்காமல் 

  இதழ்கள் புன்னகைக்க 

 விழிகள் 

வெளிச்சத்தைத்தேட !

விடியல் மீண்டும்  இருளை 

நேசிக்கும்  தானாய் ! 

அதிஸ்ரம்  கைகொடுக்க 

மறுக்கும்  

அன்பு  வேடிக்கை  

பொய் சொல்லி வெறுக்கும் 

சோகம்  மட்டுமே 

 காதல் கொள்ளும் 

வாழ்க்கை  போராட்டம் 

பலமுகங்களை 

பார்த்து   கடக்கும் 

கற்று  தர 

மறுக்கும்  பாடம்போல்  

  பாதை  ஓரத்தே 

எப்போதும்போல் 

முற்செடியாய்  வாடிப்போய்   

தனியாய்  நிற்கின்றாள்   !

என்றாவது  உயிர்  நனைக்கும் 

மழைக்காய் !!!


No comments: