இதுவரை இவளுக்கு!
கேட்டதுக்கும்மில்லை
கிடைத்ததுவுமில்லை
வெள்ளைக்காகிதத்தில்
வண்ணமில்ல சொற்களோடு
விளையாடி இத்தனை
காலமா! வியக்கின்றாள்
தனிமை தவத்தை எண்ணி!
இருந்தும் ! தொலைத்ததை
தேடும் குழந்தை போல்
விழுந்து எழுந்து நடக்கின்றாள்
தனியாய் ! கண்கள் அடிக்கடி
குளமாகும்
பூக்கள் பூக்காமல்
இதழ்கள் புன்னகைக்க
விழிகள்
வெளிச்சத்தைத்தேட !
விடியல் மீண்டும் இருளை
நேசிக்கும் தானாய் !
அதிஸ்ரம் கைகொடுக்க
மறுக்கும்
அன்பு வேடிக்கை
பொய் சொல்லி வெறுக்கும்
சோகம் மட்டுமே
காதல் கொள்ளும்
வாழ்க்கை போராட்டம்
பலமுகங்களை
பார்த்து கடக்கும்
கற்று தர
மறுக்கும் பாடம்போல்
பாதை ஓரத்தே
எப்போதும்போல்
முற்செடியாய் வாடிப்போய்
தனியாய் நிற்கின்றாள் !
என்றாவது உயிர் நனைக்கும்
மழைக்காய் !!!
.jpg)
No comments:
Post a Comment