Thursday 4 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எல்லாம் இழந்தும்
இழந்திடா  உயிர் நீ மாமா
என் உணர்வினை   இசைத்திடும்
புல்லாங்குழல் நீ மாமா
எழுதிமுடிந்திடமுடியா கரு நீ மாமா
கவிதையில் தொலைந்து எழுந்திடும்
அழகிய காதல் நீ மாமா

Bildergebnis für மழைகனவில்  தோன்றும் வர்ணங்களின்
அழகு  நீ மாமா
தோன்றிமறைந்திடா வானவில்
 ஓவியம்நீ மாமா
என் கைகள் பிடிந்து நடந்திடும்
அறிவு நீ மாமா
அழகிய வாழ்கையின்
அகம்  நீ மாமா
அதிசய விம்பத்தில் தோன்றிய
மணிகள் நீ மாமா
என்னைபிரிந்தாலும் பிரிந்திட
முடியா வாழ்கை நீ மாமா
உன் கைகள் தொட்டு மலர்ந்திடும்
வெண்தாமரை இதழ் தாளே நான்   மாமா என்றும்!!!

No comments: