Monday 20 July 2015

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்

கருணையற்ற காலமதை
வென்றிட உன் நினைவுகள்
தானடி உயிர்கொடுத்தது!!
 என்னைத் வாட்டிடும் நிழலின்
உயிர் நீயாய் மாறி
எந்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும் கடந்துவிட்டேன்
உன் நினைவில் ஓர் துளியினையும்
உதிர்திட முடியாது !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில் சிலகால
பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!

No comments: