Wednesday 22 July 2015

நான் கேட்டேனா உன்னை!!!!

தாலாட்டுத் தழிழ் தந்தாய்
தாயாய் சிறுநாள் உறவுதந்தாய்
பொறுமையே பெண்மையாக

பொருமையாக்கி சிறப்பு தந்தாய்

சிறுமையிலும் புன்னகைக்கும்
இதழ்கள் தந்தாய்

வலிகளை அடக்கிடும் மனதால்
கல்லான உணர்வை காக்கதந்தாய் 

நிழலற்ற பாதைகளே பயணமாக்கி
நடக்கத் தந்தாய்!
 நிஐங்கள் இதுவெ சிந்தனை
மதிதந்தாய்!!

பொறாமைகொள் சபையில் 
அடையாளமாய் என்னைத்தந்தாய்!

பொய்யான மனிதனின் நடுவே
தனிமையான வாழ்வுதந்தாய்!

பொறுந்தா உறவை கண்ணீராய்
கரையத்தந்தாய்

வாழா வாழ்வை விடிவெள்ளியாய்
துரே துயரமாக்கி ஏக்கதை இளமையாய்தந்தாய்

முதுமையில் சோகம் தந்தாய்
முகவரி அழியதந்தா தாய்!! 
எனிமண்ணில் புதையும் உடலுக்கு 
ஆயிரம் முகவுரையை  எதற்காய் தருகிறாய்!!

No comments: