Thursday, 20 February 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 ஒருநிமிடம்!  அப்பா 

உயிரோடு  வந்தால் 

என்  பாதைகள்  பூக்களாகும் !!

ஒரு  நிமிடம் ! அப்பா 

உயிரோடு  வந்தால் 

என்  தூங்கா தூக்கம் 

 தலைகோதி தூங்கும் !

ஒருமிடம் ! அப்பா 

உயிரோடு  வந்தால் 

மீண்டும்  என்  வசந்தகாலம் 

இசையாகும் 

ஒருநிமிடம் !அப்பா 

உயிரோடு  வந்தால்  

சொல்லாமலே   எல்லாம் 

எனக்கா மாறும்  !இல்லை 

அப்பா  மடி  குழந்தையாக 

மரணம்  வந்தாலும்  போதும் !!

No comments: