Thursday, 10 October 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

Bildergebnis für சனி பகவான்சனியவன் கண்களுக்குள் 
காலகாலமாய் சிக்கிக்கொண்ட 
பெண்ணிவளே!

பிடித்தால் விட்டுவிடுவான் 
என்றார்கள்!!
ஆனால்  விடாதே 
பற்றிக்கொண்ட காதலும் ஏனோ

கறுப்பாய் பிறந்ததால் கறுத்தவனுக்கு
கடசிவரை பிடித்த பெண்ணிவளே!
தொடர்கின்றானே பிரியா  நிழலாய் 

படிப்பேயில்லா பமரபெண்ணிவள் ஆனால்
சுற்றுகின்றானே இருள்போல்  இவளோடு  !
இவள் மனிதனைப் படித்திடவே
 சுற்றுகின்றானோ சாபங்களாய் !

பரதேசிவாழ்கையில் எடுத்தே போக
எதுகுமில்லையே   என்றார்கள் இருந்தும்  
ஏன் வந்தான் என்னோடு

 சுற்றினால் பலன் பெற்றிடலாம்
என்றார்கள்  
நான்  அவனை நம்பியே
சுற்றியே முதுமைகொண்டேன்


இருந்தும்  ஏன் என்னை விடாதே
பிடித்தே சுற்றுகின்றான் !!பிறர் தவறை 
பார்ராமல்

யார்யாரே அவனால் உச்சம் காண
உச்சம்தலை விதியாய் என்னையே
பற்றினானே 
பாவமாய்தோன்றுது எனக்கும்!
அவனை எண்ணுகையில்!!!

No comments: