Saturday 5 May 2012

மொழி

பள்ளியில் படித்தெல்லாம்
வாழ்க்கைக்கு உதவ
வில்லை
உள்ளத்து மொழியினை நாவிற்கு
மறைக்கத்தெரியவில்லை
கள்ளத்துமொழிபடிக்க ஒர்
பள்ளிக்குப் போனதில்லை
நடிப்பின்மொழிக்கேர் வாத்தியார்
வைத்ததில்லை
பொய்யின் மொழிகற்று
வாழப்பழகவில்லை
ஏமாற்றி வாழ ஒர் மொழியும்
தேடவில்லை
அறிஞ்ஞரின் மொழியினை
கற்றிட தோன்றவில்லை
அறிவின் பக்கத்தை அறியும்
அறிவும் எனக்கில்லை
 அறிவுடையோர் கேள்விக்கு பதிலும்
அறிவு கொண்டு சொன்னதில்லை
மனிதறிவின் தத்துவத்தின் பக்கங்களும்
 என் அறிவிற்கு புரியவில்லை
மனிதப் பிறப்பின் கணகிற்கு கொடுத்த
மொழியதனை தேடியும்  நான் கற்கவில்லை...................................................



No comments: