உயிரின் ஆர்ப்பாட்டம்
சத்தமின்றி போனது!
உறவின் கண்கள்
உயிரை தேடுது
எங்கும் !
வலிகள் மெல்ல வரிசைப்படுத்தி
வஞ்சனை செய்யுது
உணர்வை!
தலை சாய்தத தணையனை
குடிக்குது கண்ணீரை
சுகமாய்!!
விலைகள் கொடுத்து வாங்கிய
பொருட்கள் மதியற்று
கிடக்கிறதெங்கும்!!
விலையே இல்லாத உடல்
கட்டியழுதிட முடியாமல்
பார்வைக்காய் காத்திருக்கு!!
நெடிகளோடு நெடிகள் சேர்ந்து
நினைவுகளை கொன்று தின்றது
மெல்ல!!
மெல்ல!!
நியங்கள் தொலைந்து நிழலாய்
போனது நியம !
இதயம் பேசிட துடிக்க
அறிவு எழுந்து
உணர்வை தடுத்து
அடுத்ததை
சிந்திக்க தொடங்குது
மனம் மெல்ல!!!!
.jpg)
No comments:
Post a Comment