Sunday 5 May 2013

அம்மா!!!

இல்லறம் போற்றி நல்லறம்
காத்திடும் எம் அறமே
அன்பிற்கு ஈடு சொல்ல
இவ்வுலகில் ஈடில்லா மாணிக்கமே!!

இணையாகி துணையாகி
இல்லத்தின் ஒளியாகி
கனிவாகி பொறுமையாகி
பெண்மைக்கு பெருமைசேர்த்த பொக்கிஷமே!!

தாயாகி தன்னைத்தொலைத்து
கண்ணுக்குள் எம்மை வைத்து
எமக்காய் கனவைத்தொலைத்து
கருணையோடு காத்திடும் அற்புதமே!!

காயங்களான காலங்களை மாற்றி
காயத்தின் மேல் காயப்படாது
காய்பட்டு காயப்பட்டு எம்மை
 காயப்படுத்தாது காத்திடும்  தெய்வீகமே!1

கோலம் கலைத்த காலங்களை
வர்ணக் கோலம் போல் அழகாக்கி
சீராக்கி சிறப்பாக்கி  புதுமையாக்கி
பார் சிறக்க எம்மை காத்திடுபவளோ எம் தாயோ!!!

No comments: