Wednesday 22 May 2013

அப்பா

மார்வோடு உறங்கவில்லை
கைபிடித்து நடக்கவில்லை
தோல்சாய்ந்து கைபேசவில்லை
நான் நடக்க கற்று தந்ததில்லை
ஒர் வாய் சோறு ஊட்டவுமில்லை
உங்களுக்கு பிடித்ததை நான்
செய்யவுமில்லை
நல்ல ஆண்மகனை
உங்களை போல் பார்க்கவுமில்லை
வரபுகளில் நீங்கள் நடக்க
ரசிக்கவில்லை 
மேல்சட்டை அணிந்து பார்த்ததில்லை
அணிந்த போதும் ரசிக்கவில்லை
அன்னையை  படமாய் கூட
வீட்டில் பார்ததில்லை
எந்த பெண்ணும்
அதிகம் பேசி பார்கவில்லை
என்னை தவிர மற்றவர்
உங்கள் முன் இருந்ததில்லை
 உங்கள்
நாற்காலியில் என்னை தவிர
யாரும் இருப்பதுவுமில்லை
என் உயரம் உயர  
 வேலியின் உயரம் உயர்ந்ததுண்டு
அதற்கு மேலே ஏறி இருக்கும் என்னை த்திட்டி
அடித்தில்லை
என் கோவம் கண்டு
வருத்தப் பட்டு
மாறியதுண்டு உங்களுக்காய்
நான் மாறவுமில்லை
சண்டை போடாத நாட்கள் என்று
என்னிடம் எதுகுமில்லை
 என்னை கேட்டு பின்னோ
சாப்பிட்ட
உங்கள் பாசம் புரிந்ததில்லை
உயிரோடு இருந்த வரை!!!!!
இன்று வலியோடு நான் துடிக்க
ஆன்மாவாய்  என் கண்ணீர்  துடைத்த
உங்கள் கரம்தெரியவில்லை
அந்த பரிசத்தை  உணர்கின்றேன்
உங்கள் வாசத்தை கொண்டு
யாருமில்லாது போனதால்........................

No comments: