பொய்கைகரை நாணல்
தொன்றலால் சாய்ந்தாட
வைகரையாதவன் சோம்பலின்றி
எழுந்தாட
பனிபடர்இலைமேல்
தண்ணீர் கோலமிட
மலர்கள் சிலிர்த்து
இதழ்விரித்து
கண்சிமிட்ட
கைபிடித்து நான்
நடக்க காத்திருக்கும் கனவு
கண்விழித்திடாதுறங்க
கண்விழிக்கா மலர்தனை
அரவணைக்க ஆதவன் தான்துடிக்க
இதழ்விரித்த பூவெல்லாம்
என்னைத்தேடி மணம் பரப்ப
ஆத்தோடு ஆலமரத்தடியில்
காத்தாட அமர்ந்த பிள்ளையார்
என்னை காணது தான் துயில
வந்த. ஓர் கனவலால்
பதறியே. சிதறியது என் நெஞ்சு
என் துயிலை
கழைத்ததுவே ஓர்
நாகம் பயத்தில் மிஞ்சம்
மீதியில்லாமல் உயிர் நடுங்க
புரியாது நான் தவிக்க அதுவோ
பூக் கூடை தான் சுமக்க
அறியாது விழி நீராட
விடிந்தும்விடியா பொழுதிற்குள்
தலையில்லா நாகத்தோடு
ஒன்றும் புரியாதே
நான் நடக்க
குளிரோடு வாடிடும்
மலரோடு ஆலமரத்தடியில்
ஐந்து தலையோடு
உன்னை கண்ட போது புரிந்தது எனக்கு
உன்னோட
பாதி யாய் காட்சி தந்ததுவும்
எல்லாமே தெளிவாச்சி
மண்தின்ற வயமுதல் மண்தின்னும்
காலவரை மாறது நம் காதல்.....................
No comments:
Post a Comment