Sunday 5 May 2013

இருகோடு




என்னில் இதயம்
உன்னில் துடிப்பு
என்னில் வேதனை
உன்னில் கனவு
என்னில் வறுமை
உன்னில் கற்பனை
நாமிருவர் ஒருவராவது
எப்படி!!என்றாள் மனைவி
நன்றாய் கேளடி என் பெண்ணே!!

உன்னில் என்  தேடல்
என்னில் தொலைந்த என்
அன்னையின் பாசம் !!

எனக்காய் தந்து என்னை மகிழ்வித்து
எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம்
என் உணர்வின் மகிழ்ச்சிகளோ!!

என் உணர்வோ அவள்  உணர்வு
ஆனதால் உனக்கு வேண்டாம்
தனியுணர்வு !!உன்னை
அழித்து எனக்காய் வாழவோ
உன்னை நேசித்தேன் என்றான்!!

சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது
இன்னும் புரியவில்லை வாழ்வை

No comments: