Thursday 18 August 2011

விளையாட்டாய் ஒர் விதி

பஞ்சதிலும் பஞ்சம் மறக்க
பஞ்சனை தலையணையாய்
ஒர் காதல்  கற்பனை வார்த்தைக்கு
கைகொடுத்து பசியகற்றி
கனவாய் உயிர் பெற்று
உயிரோடு விளையாட !!
உணர்வு மயங்கி   மறத்து
உயிரோடு உயிர் சேர்ந்து
உயிருக்குள் உயிர்பெற்று
உறவாகி கருவாகி கனியாகி
நிறை நிலாவாகி ஒளிபெற!!
குறைகண்டு பணம் தேடி
பதவிபெற்று அசிங்கமாகி
விரட்டிய விதியிலோ  அவமானச்சின்னம்
அடிவயிறு  வலியாகி முத்தாகி
பூமியில்   பூத்தபோது!!
பசிதுறந்த   கேள்வியாய்
 தலைவிதி தான் நானாகி
பாதையோர அழுக்காய்
உயிர் துறந்த பெண்மைமுன்
மானம் தொலைத்த காமமாய்
பாடம் சொன்னது இது விதியென்று...
யார் இதை நம்புவார்?

No comments: