Sunday 14 August 2011

யாரிவள்.........

கதிரவன் கனிமொழி
காரிருள் ஒளிமொழி
காந்தவில்மொழி
தென்றலின் அசைமொழி
பூக்களின் புதுமொழி
இறைவனின் அருள்மொழி!!
காகிதப்பொருள்மொழி
கல்லின் கூர்மொழி
பாதையின் பாதமொழி
முற்களின் முதல்மொழி
முவேந்தர் சொல்மொழி
முதுமையின் தாய்மொழி
மூத்தவர் பண்புமொழி!!
அறிவில்லா பார்வைமொழி
அடைக்கல பறவைமொழி
சிந்தனை சிறகுமொழி
சிந்திக்கா இதயமொழி
இன்பத்தின் சொல்மொழி!!
சொல்லிடாத் துயர்மொழி
 புன்னகைக் கண்ணீர்  மொழி
களைத்திடா கதைமொழி
கவிதையின் விழிமொழி
கருணையுள்ளோர் அன்புமொழி.....



No comments: