Thursday 18 August 2011

சொந்தம்

பலசொந்தம் கூடி நிக்க
சிலசொந்தம் பகைத்து நிக்க
உறவாகி நின்றசொந்தம்
விலகிப்போக !!

விடைதேடிகளைத்த சொந்தம்
ஊரைக் கூட்டி கதைபேச
உயிரில் கலந்த சொந்தம்
எட்ட நின்று கண்ணீர்விட!!

சொத்துகள் சொந்தக்காரராய்
ஆயுள்காலப் பாதபூசைசெய்ய
அழகான தவறுகள் அதற்குள்
மறைந்து ஆறாம் அறிவை காக்க!!

உனக்கும் எனக்குமான மண்ணில்
கற்களும் முற்களும் என்னைத்தாக்க
பூக்களும் புல்வெளியும் உன்னைக்காக்க!!

புரிந்தது எனக்கும் என்னிடம்
இல்லத பணமும் பதவியும்
உன்னிடம் உண்டானதால்
என்னைக்காக்கா அனைத்தும்
உன்னைக்காப்பது!!                 

No comments: