Sunday 14 August 2011

கனவானகற்சிலை......

என் நிழலுக்கு
நிழலொன தொடர்ந்த
நிழலான உணர்வென்று
நியமானச் சொல்லி
கனவென்றை உள்ளோடு
விதையாக்கி என் நினைவோடு
நிழலாகிக் கதைபடிக்க!!

அறிவிலந்த மனமிது
அதற்காய் காத்திருந்து
காத்திருந்து சுகமிழந்து
தான் தவிக்க!!

சொல்லியும் சொல்லாமலும்
சுமையான வாழ்வது
உயிர்கொண்ட உணர்வால்
மெல்ல மெல்ல தனக்குளுடைய!!

பெண்ணிதயம்  தானிழந்து
தன்யையே தானழித்து
தனக்குள் தான் தொலைய            
மறந்ததிடா நினைவுகள்
உணர்வைக் கல்லாகி
கொஞ்சம் கொஞ்சமாய்
தன்னையோ கல்லாக்கி
கற்சிலைகனவாகின்றது.............................

No comments: