Thursday 28 June 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஈழத் தமிழ் நாட்டில்
இனக்கொலை வெள்ளத்தில்
ஏங்குகின்ற உயிர்களே!
ஒருகணம் நில்லுங்கள்!
வாழத் தேதியில்லாமல்
வாட்டுகின்ற கொடுமையிலே
வதைபடும் வரலாறு
என்றைக்கு நிற்குமோ?

மாலத்தான் முன்னின்று
மரணத்தை துச்சமென்றென்னி
ஈழத்து மைந்தர் செய்யும்
ஈகம் தான் கொஞ்சமா?
மீளத்தான் வழிசொல்லார்
மேலும் வசைபாடுவதை
காலந்தான் நிறுத்துமா?
கண்ணீர்க் கதை மாறுமா?

2 comments:

சோமி said...

எங்கள் அவலங்களிச் சொல்லும் உங்கள் எழுத்துகளின் வருகைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்

சு.கஜந்தி said...

நன்றிகள் என் உறவிற்கு உங்கள்
ஆதரவு இருந்தால் தொடர்ந்து எழுத
முயற்ச்சிக்கின்றேன்