தேவதை
விழிகளால்ஆயிரம் கதைபேசி
தலை சாய்து எனைப் பார்த்தாள்
கண்ணக்குழிவிழும் சிரிப்பொலியாள்
என் கரம் தொட்டு மடியமர்ந்து என்னை
முத்தமிட்ட உணர்வில் அவள் பலகாலம்
என்னோடு வாழ்ந்தாய் ஒர் ஞாபகம்!!
என் இதயம் வலியெடுக்க
என் எண்ணங்கள் நீர் சுரக்க
என் கரங்கள் கட்டியணைக்க
என் வலிகள் நெஞ்சோடு வெடிக்க
அவள் எனக்குள் அடைக்கலமானால்!!
சின்னப்பாதம்பதித்து
கெஞ்சிகேட்க்கும் கொஞ்சுமொழியால்
சின்ன சின்ன குறும்புகளை
சிங்காரமாய் செய்து
என்னோடு வந்தவள்!!
என்னை ரசிகையாக்கி
என்னை மறந்து , என்னில் நின்று
பிரிந்து, செல்லுகின்றாள்
என் விழி நீரைப்போல்................
No comments:
Post a Comment