Sunday 24 June 2007

என் உயிர்ச் சாரல்............,

அதிகாலை நேரத்து
பறவையின் இசை கேட்டு
நான் எழுந்திட ஆசை

சூரியன் தீண்டப்  பனித்துளியை
நான் தீண்டி விளையாடி
மகிழ்ந்திட ஆசை

தென்றல் பட்டு அசைந்தாடும்
மொட்டு, சூரியன் தொட்டு
மலர்ந்திடும் அழகால்சிந்தும்
பனித்துளியில் நான் நனைந்திட
ஆசை

பூவின் இதழுக்குள் என்
முகம் புதைத்து  என்னை
மறந்து ஓர் நாள் உறங்கிட ஆசை

இளங் காற்று அசைய!!  ஆடிடும்
மரங்களின் ஓசை தன்னை
ரசித்தபடி  நதிக்கரை ஓரமாய்!
நான் நடந்திட ஆசை!!

கார்மேகம் வான் மறைக்க
இருள் வந்து எனை மறைக்க
பசும் புல்தரையில் நிலவெறிக்க
உறவே இல்லா தனிமையோடு
ஓர் நாள் நான் பாடிட ஆசை,....
.....

No comments: