Monday, 16 December 2013

கற்பனை...................

குழந்தையின் சிந்தனையானவள்
 குறும்பில் சிறந்தவள்
அன்பை யாசிப்பவள்
நல்லோரை வணங்குபவள்
தீயவரை பரிதாபமாய் பார்ப்பாள்
அனைவரையும் உறவாய்நினைப்பாள்
உண்மைக்கு தலைசாய்ப்பாள்
பொய்யுக்கு முகம் சிவப்பாள்
எதிரியாய் யாரையும் எண்ணாதவள்
பெண்மையை இகழ்வோரை
 மன்னிக்காதவள்
கோழைகளை காளைகளாய்
காண்பாள்
குட்டி ஆசைகளை ஆசைகளாய்
சுப்பாவள்
பணத்திற்காய் விலையாகதவள்
வறுமையின் உணர்வை மதிப்பவள்
 இயற்கையிடமேவாழ்வைகற்று
கொண்டாள்
ஆண்மையின் ஒழுக்கத்தையே
உயர்வாய் காண்பவள்
கோபதின் வார்த்தைக்கு ஆழம் தெரியதவள்
மலரின்  மென்மை போன்றவள்
நேசிப்பவர் திட்டினால் மட்டுமே
உதிர்ந்திடுவாள் வாழ்வில்!!!


Thursday, 12 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்....

என்இதயசுவர்களில்
வரையப்பட்ட
 உன் ஞாபங்கள்  என்
உதிரத்தின் உணர்வுகளில்
ஓடுவதால்
என்மரணதில்கூட
அழியாது அன்பே!!


குட்டிக்குட்டிச்சாரல்....



 என் எல்லாவானும்
அடைக்கபட்டது போல்
எனக்குள் உன் நினைவுகள்
அடைக்கபட்டு காற்றைக்கூட
செல்லாது வைத்துக்கொண்டது
சாவியயின்றி திறக்கதெரிந்திட்ட
திருடன்  என மறந்து!