Tuesday, 29 April 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கனவுக்குள்  கண்கள் 

ஏங்க  சற்றும்  என்னை 

சிந்திக்காமல்  போகின்றான் 

அவன்  !!சந்தித்த 

என்  சதோஷமிடங்களை 

சங்கடத்தில்  தள்ளிவிட்டு 

அவள்தான் தன் சதோஷமென்று !

கைகள்  தொடாத்தூரமாய் 

கைகள்  பற்றிப்போகின்றான் 

என்  கைகள்  விட்டு !!

கொஞ்சம்   கவலையும் 

கொஞ்சம் சோகமும் 

கொஞ்சமாய் விக்க  

விழிகள்   என்னை  பாவமாய் 

பார்த்தே  விழித்து  !!!



 


Monday, 28 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் கனவொன்ற ஒன்று 



இருந்தாய்  நினைவில்லை 

அவள்  அழகான  முகம்  மறைந்த 

பின்னர் 

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............

 இதுவரை  இவளுக்கு!  

கேட்டதுக்கும்மில்லை 

கிடைத்ததுவுமில்லை 

வெள்ளைக்காகிதத்தில் 

வண்ணமில்ல சொற்களோடு 

விளையாடி  இத்தனை 

காலமா!  வியக்கின்றாள் 

தனிமை  தவத்தை  எண்ணி!

இருந்தும் !  தொலைத்ததை 

தேடும் குழந்தை  போல் 

விழுந்து  எழுந்து   நடக்கின்றாள் 

தனியாய் ! கண்கள்  அடிக்கடி 

குளமாகும்   

பூக்கள்  பூக்காமல் 

  இதழ்கள் புன்னகைக்க 

 விழிகள் 

வெளிச்சத்தைத்தேட !

விடியல் மீண்டும்  இருளை 

நேசிக்கும்  தானாய் ! 

அதிஸ்ரம்  கைகொடுக்க 

மறுக்கும்  

அன்பு  வேடிக்கை  

பொய் சொல்லி வெறுக்கும் 

சோகம்  மட்டுமே 

 காதல் கொள்ளும் 

வாழ்க்கை  போராட்டம் 

பலமுகங்களை 

பார்த்து   கடக்கும் 

கற்று  தர 

மறுக்கும்  பாடம்போல்  

  பாதை  ஓரத்தே 

எப்போதும்போல் 

முற்செடியாய்  வாடிப்போய்   

தனியாய்  நிற்கின்றாள்   !

என்றாவது  உயிர்  நனைக்கும் 

மழைக்காய் !!!


Tuesday, 15 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருமுறையில்லை 

பலமுறை ஏமாத்தும் 

மனசு இன்னும் திருந்த 

மறுக்கின்றது !!


குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆயிரம்  விழிகள் 

குறையோடு  பார்க்கின்றது 

பேசுகின்றது  ஆனால் 

நேசத்தோடு  ஒருவிழிப்பார்வைபோதும் 

ஆயிரம்  குறைகள்  மறைய 

இப்போ  மிருங்களுக்கு 

புரிகின்றநேசம்  மனிதனுக்கு 

புரிவதில்லை 

Friday, 11 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

முதல்முறை  எனக்கு 

என்  அதிகாலைநேரத்து 

கடிகார அலாரம் 

வெறுக்கின்றது!!





குட்டிக்குட்டிச் சாரல்......,

 படைத்தவன்  நினைக்கவில்லை 

தன்னை 

 என்னை  படைத்தவனும்  நினைக்கவில்லை 

என்னை இருந்தும் 

விடிகாலை  பொழுது  விடியாமல் 

எழுப்புகின்றது  என்னை!!
 

Thursday, 10 April 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

பிறப்பை  கொண்டாட 



வேண்டாமென்றே  இறப்பை 

தந்தான் இறை!!

சரியென்றேன்!!  ஆனாலும் 

ஏனோ  என்  பிறந்த தினத்தில் 

இறப்பயே பரிசாக்கின்றான் 

மீண்டும்  மீண்டும்  ஏன்தான் 

 கோவமோ  என்னோடு 

அனாலும்  நேசத்தை 

கற்று கொடுத்த  உயிரை 

என்னோடு  சாம்பலாக்கிய 

இறையே  உயிர்  உள்ளவரை 

மாறாத  நினைவுகள் 

அதிகம்  தான்  ஆனாலும் 

ஏந்துகின்றேன்  என்  மாமியின் 

நினைவையும் இன்று !! இன்றைய 

சம்பலுக்குள்  மீண்டும் 

என்  உயிர்  பிறக்கின்றது

மாமியின்  நினைவுக்கண்ணீரின் 

பூவாய் !!!

Tuesday, 8 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை  எடுத்து 

என்னை  அழித்து 

ஏனோ  என்னை 

தூக்கி  ஏறித்தபின்னும் 

என்னை  துரத்து  சாபம் 

மீண்டும்  மீண்டும் !!

 முகமூடிமுகங்களின்  பொய்களை 

நம்பி நம்பி  ஏமாறச்சொல்லி !!!


Monday, 7 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சிறகுகள் இல்லைத்தான் 

கனவுகள்  தொல்லை  தான் 

வாழக்கை  சிக்கல்  தான் 

வலிகள்  பெரிதுதான்

வழிகள்  தெரியவில்லை  தான்  

அனாலும்  இதுவரை  என் 

தேடலின் வழியோரத்தில் 
 

கனவோடு  நின்றதில்லை !!


Friday, 4 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்  பிறவியின் 



பொருள்  தெரியவில்லை 

 என்  வாழ்வின் அர்த்தங்கள் 

புரியவில்லை  நடந்ததும் 

நடக்காமல்  போனதிற்கும் 

காரணங்கள்  தெரியவில்லை 

ஆனாலும்  இந்தநிமிடம் 

எனதாகின்றது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணம்  மரணப்பூக்களை 

நிழலுக்கு தூவிக்கொண்டே 

பின்னேவர ஆசை 

கனவு
ப்பூக்கள் உடளுக்கு  

தூவிக்கொண்டே முன்னே  போக  

தொடக்கமும்  முடிவும் 

அறியாமலேயே ஆட்டம்

போடுது  பிறவி !! 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சமூக வலைத்தளங்களால்  

வீட்டுக்குள் பண்பாட்டு 

சாதனை!!   தமிழ்மொழிவழி 

சாதனையாய் கற்றுக்கொடுக்கும் 

புதியமுற்சி 

 நேரங்கள் இல்லைத்தான் 

அனாலும் ! 

நேரம் போவதேதெரியா 

வழியின்  வலியாகும் 

உறவுப்பலம்  !!!தமிழ்  

கொஞ்சமும்  அச்சமில்லாமல்  

 கொஞ்சிது கெஞ்சிசு 

நாகரீகத்தமிழாய் !

என்னடா  தமிழ்   இது 

மூடநம்பிக்கை 

பொக்கிஷம்  என  சொன்னதால் 

வந்ததோ  புதிய மாற்றம் !

நாளை  குழந்தையை 

கேள்வி கேட்டிட  முதுமையில்லா 

பண்பாட்டு  சாதனைகளாய்  

இன்றைய  தமிழ் !நகரிக்காவுலகத்தை 

பாரத்தால்  பிறந்த  பூக்கள் 

சொல்லும் புதிய பண்பாடு 

தேசமெங்ககும் !!






Thursday, 3 April 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அறிவியல்  காத்திடா 

துயரம்  அழகிய  தாய்மையின் 

நிரந்தர  தூக்கம் !!

இந்தக் கொடுமையின் 

தாலாட்டுக் 

கேட்டு நினைவுகள்  

அழுத்துகின்றது !

ஒரு  அன்பின் முகவுரை 

உறைந்தது தானாய் !

பிரிவுகள்  தொடர்கதை  

இருந்தும் 

 தேடுது  தேடுது  இதயம் !

உறவுக்குள்  சிறந்த  உயிர் 

உறவாய்  என்னை ஏந்திய போது 

உலகில்  இதைவிட  ஒரு 

தாய்மை  இருப்பதாய் 

தோன்றவில்லை  எனக்கு!

இப்போ  நிரந்தர  பிரிவில் 

பிரிந்தவர்  உறவுக்குள்  

உறவாய்  செல்லுகின்ற 

என்  தாய்மைக்கு  

பூக்களால்  மன்னிப்பு !!!