நீண்ட பாதையெங்கும்
நீயும் நானும்
நீண்ட வலிகளை எதிர்த்தே
நடந்தோம்
நமக்கான பாதையில்
நம்மை தவிர யாருமில்லை
நமக்கான வாழ்க்கைக்குள்
உனக்காகவே என்னை எடுத்தாய்
எனக்கான நீயாய் இல்லாமலே
கொஞ்சம் சண்டை கொஞ்சம்
கோவம் கொஞ்சநேரம் கடந்தால்
மறந்தே போய்விடும் நாம்
எதற்கா சண்டையிட்டோமென
உனக்கான பாதையின் தொடக்கம்
எனக்கான தனிமையின் தொடக்கம்
இப்போ நான் தனியாய்
நீ தனியாய் நமக்கான
பாதையில் நமே இல்லை
என்கைபிடித்திட்ட
நீ தூரமாய் போனாய்
நானோ
ஏனோ வழியோரம்
ஏமாற்றம் என்பதை ஏமாமந்திடும்
பயணத்தை நீ தொடங்கிட்ட
நாட்கள் கூறியதை உனக்கான
நான் புரிந்திடாமலே தொலைத்திட்டேன்
என்னை!!!
No comments:
Post a Comment