Friday 14 July 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நாட்கள் கடகடவென ஓடிக்கொண்டது

மண்தந்த சின்ன சின்ன் ஆறுதல்களை

சிதறடித்தே நாட்கள் 

கடந்தே போனெ  துரத்துதனியாய்  

மீண்டும் வரவேற்கின்றது

பணத்தேடும் பணக்கார யுத்தம்

இங்கே பக்கத்தேயிருந்தும்

தூரமாய் பெய்யும் அன்பு மழை

காணாமல் போகும் உணர்வு இறந்தே

தேடும் ஆடம்பரபோராட்டம்

அதிகாலையும்  இரவும் ரசனையற்றே

தனியாய் கடக்கும்  

எல்லோரும் ஒரு பொய்யில்

அழகாய் தெரிவார்

மனமட்டும் சலிப்போடு ஒரு கனவை

சுமக்கும் மீண்டும் வந்திடலாம் 

என்ற நம்பிக்கையாய் இருக்கும்!!!




No comments: