Wednesday, 29 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னால் முடியாதவற்றை
முடிவாக்கி முகவுரையெழுதாதே
முடிவுரைகள் தவறானால்
மொத்ததில் முத்ததில்  கூட
உப்புக்கரிபே நித்தமாகும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்தனையாண்டு கடந்தாலும்
முதுமையே வந்ததாலும்
பேரன் பேத்தி கூட கண்டாலும்
துணையின் பாசம் கொஞ்சம் மாறினால்
உணர்வின் ஆழத்தில் பொறாமையாய்
அசைவதே அழகியகாதலாகின்றது!!

Tuesday, 28 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் எதுவென  காணாது தேடி
ஏடுகளைப் புரட்டினோன்
காகிதக்கிறுகள்கள்
காலத்தைக் காட்டியது !!
நித்தம் ஒளியற்று கரைந்த வாழ்வின்
முற்கள் சுற்றிய கடிகாரயெலிக்குள்
இளமையுடைத்த  முதுமையில்
சிதறும் கண்ணீர் துளியில் சிரிப்பதுதான்
காதலென்று!!!

Wednesday, 22 July 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தாலாட்டுத் தழிழ் தந்தாய்
தாயாய் சிறுநாள் உறவுதந்தாய்
பொறுமையே பெண்மையாக

பொருமையாக்கி சிறப்பு தந்தாய்

சிறுமையிலும் புன்னகைக்கும்
இதழ்கள் தந்தாய்

வலிகளை அடக்கிடும் மனதால்
கல்லான உணர்வை காக்கதந்தாய் 

நிழலற்ற பாதைகளே பயணமாக்கி
நடக்கத் தந்தாய்!
 நிஐங்கள் இதுவெ சிந்தனை
மதிதந்தாய்!!

பொறாமைகொள் சபையில் 
அடையாளமாய் என்னைத்தந்தாய்!

பொய்யான மனிதனின் நடுவே
தனிமையான வாழ்வுதந்தாய்!

பொறுந்தா உறவை கண்ணீராய்
கரையத்தந்தாய்

வாழா வாழ்வை விடிவெள்ளியாய்
துரே துயரமாக்கி ஏக்கத்தை
 இளமையாய்தந்தாய்

முதுமையில் சோகம் தந்தாய்
முகவரி அழியதந்தா தாய்!! 
எனிமண்ணில் புதையும் உடலுக்கு 
ஆயிரம் முகவுரையை  எதற்காய் தருகிறாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவன் !!
கற்பனையாய் ஆண்மையை
வைத்து இது காதலாயென கருவை
தேடுகின்றான்!இதுவோ காதலானால்
உலகின்  மொழிகளில்லா காதலால்
மனிதன்  வாழ்வான்!!!இல்லையெனில்
மிருகங்களோ காதல்மொழிபேசும்!!

Monday, 20 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒர்பெண்ணைக்கலங்கபடுத்தும்
வரை பலர் பேசுகின்றனர்
அவள் கலங்கித்துடிதால் அவளுக்காய்
பேசிட யாருமற்று போகின்றனர்!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்

கருணையற்ற காலமதை
வென்றிட உன் நினைவுகள்
தானடி உயிர்கொடுத்தது!!
 என்னைத் வாட்டிடும் நிழலின்
உயிர் நீயாய் மாறி
எந்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும் கடந்துவிட்டேன்
உன் நினைவில் ஓர் துளியினையும்
உதிர்திட முடியாது !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில் சிலகால
பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!

Thursday, 16 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் மூச்சு !உன் உயிரை
சுமப்பதால் என் வாழ்கை
சாந்தியின்றி போனது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பின் நம்பிக்கை ஆயுதம்
பெண்மையை வாழவும் வைக்கின்றது
வாழ்வையும் சிதைக்கின்றது

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெண்மையில் நம்பிகை
வைப்பதால்
 இல்லம் ஓவியமாகிறது
அவநம்பிக்கை கொள்வதால்
காரிருள் இல்லமபகின்றது!!

Tuesday, 14 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொரு மனிதனின்

பொய்முகம் உடையும் 
போதும்!!
என்முகம்  மண்ணுக்குள்
 மறைகின்றது!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறைவா!!
 நீயழித்த என்னை காணிக்கையாக்கி
மரணத்தை பரிசாய் கேட்கின்றேன்
நீயேன் வலிகளையே பரிசளிக்கின்றாய்!!
இறைவா!!
மிச்சிய  உயிரை காணிக்கையாக்கி
நீ அருளியவலிகளை வென்றிடயெழுகின்றேன்
நீ தோல்விகளை காணிக்கையாக்கி
உயிரை காக்கின்றாய்!!இன்னும்
மண்ணில்  எதற்காய்
நான்!!!!

Wednesday, 8 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவன் பெயரை  நித்தம்
காயத்திரிமந்திரமாய்
உச்சரிக்கின்றேன் !அவனே
என் பெயரை நினைத்திடக் கூட
மறுகின்றான் ஏனனில் அவன்
இயத்தில்  இன்னெருபெயர்
காதலாய் மலர்திருப்பதால்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் மனதை உன்னால்
புரியத்தெரியவில்லை என்பதால்
எனக்கு மனதே இல்லையென
எண்ணி சித்திரவதை செய்யாதே!
சிதைக்கபட்ட மனதின் கண்ணீர்துளி
உன் கண்களுக்கு புரியாது !!ஏனனில்
நேசத்தை நம்பிகையின்றி தேடுகின்றாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

படைப்பின் தத்துவம்
அறியாவரை படைக்கபட்டவை
கலைகளின் தத்தும் அடையாது!
பிறப்பின் தத்துவம்
உணராவரை இறப்பின் தத்தும்
உண்மையின் தத்தும் அடையாது!

Tuesday, 7 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் தோல்சாய
 மரிக்கொலுத்து நானிருந்தும்
வசந்ததின் வாசம் மாமன்
வாழ்விற்குள் ஒளிராது போனதோ
நாசிக்குள் உணரா என்வாசத்தை
நாசுக்காய் தோடுகின்றான் சோலைக்குள்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்மீதான கோவத்தில்
என்மீதான நம்பிக்கை
நம்மீதான வாழ்வற்றபோதும்
தமிழ்மீதான காதல்
பலகாலம் கடந்தும்
கதைபேசு கிளியாய்!!!

Sunday, 5 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னை சுமகாக்கா
மனிதன் மண்ணைச்சுமக்க
தனியாக சட்டைகிழித்து போடும்
வேடம் விடுதலையானால்
உணர்வற்ற விடுதலைக்காய்
மக்கள் போடுவது மடிப்பிச்சையாகின்றது!!

Thursday, 2 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமான் நீயிருந்தும்
மாமான் மகளாய் நானிருந்தும்
யோடியாக மீராவாய் 
உன் பெயருரையே 
என் உயிரில் ஏழுதிக்கொண்டு  
இன்னும் எந்தனை யென்மம் 
உன்னைச்சேர காத்திருப்பது  மாமா!!